திரும(ர)ணம்
என்.அஞ்சுகம்
அறுபதுக்கு இருபதாய்
வாழ்க்கைப்பட்டுப் போன - என்
புகுந்த வீட்டுச் செல்வாக்கு கண்டு
பூரித்துப் போன அம்மா
அக்கம் பக்கத்தாடம்
‘எம் மவளுக்கென்ன...
வேளக்கொரு ஆடையின்னு
வெதத்துக்கொரு சாப்பாடுன்னு
ராசாத்தியாட்டம் இருக்கா'ன்னு சொல்ல
ஆமோதித்துத் தலையசைக்கும் அப்பா
வாய்பிளந்து ஆர்வமாய்க் கேட்டுப் பின்
"எப்படியோ நல்லாருந்தா செரி என
நகரும் பெண்கள்...
சே! என்ன மனிதர்கள்...
அறுசுவை உணவும்
ஆடம்பர வாழ்வும்
ஆறுக்கும் அறுபதுக்குமே
இனிமை தரும்
இருபது வயது இளமைக்கு...?
பெண்ணின் உணர்வுக்குத்
தீ வைத்து
உயிரோடு கொல்லும்
இதற்குப் பெயரும்
திருமணம் தானா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|